ஜம்பிங் ஜப்பாங்.... ஜம்பிங் ஜப்பாங்.... கிலி கிலியே !
வெல்கம் டு எக்ஸ்ட்ரா
இன்னிங்க்ஸ் டி ட்வெண்டி
.
ஆஹா ...அற்புதம்’ டா ! சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெர்சஸ் ராயல்
சேலஞ்சர்ஸ். நவ்ஜோத் சிங் சித்து ஸ்டுடியோ
மே ஆ கயா ஹை ! .
தண்ணி பாட்டில், கால் வைக்க மினி ஸ்டூல் ,ரிமோட் சகிதம் நான் என்
ஆஸ்தான ஈஸி சேரில் மைக்கேல் ஹஸ்ஸி’யை எதிர்பார்த்து, ஆவலுடன் அமர்ந்தேன். இன்று
“க்ரிஸ் கெய்ல்” என்ன சாப்பிட்டு
இருப்பான்? என்று யோசித்து சற்றே டென்ஷனாக ஆரம்பித்தேன்.
“ஜப்
ச்சாயல் கோ ஹாய் ஜாத்தா ஹை, வொ ஹமாரா பஜாஜ் ஹோத்தா ஹை” ....சித்து என்னமோ
ஹிந்தியில் சொல்கிறான் ... எல்லாரும் “வாஹ் வாஹ்” என்று பாராட்டுகிறார்கள்.பின்னர்
ஸ்டுடியோ அழகிகள் ஒரு கெட்ட ஆட்டம்
போடுகிறார்கள். நரைச்ச முடி ஜடேஜா, தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலை ஆட்டுகிறான். “மேட்ச் அபி குச்சி தேர் மெ ஷுரு ஹோநெவாலா
ஹை” என்கிறான் அந்த கோட்டு கோபி. சரி! சென்னை பர்ஸ்ட் பேட்டிங் ! சூப்பர்பு.
என்னதான் டிவியில் ஆயிரம் சூப்பர் சிங்கர் ,மானாட மயிலாட மற்றும் சீரியல்கள் வந்தாலும் மேட்ச் பார்ப்பது மாதிரி வருமா?
ரவிசாஸ்திரியும்
வெங்க்சர்க்காரும் வெள்ளை சட்டை போட்டு, ஐந்து நாள் டொக்கு போட்டதையே
வெறியாக பார்த்தவன் நான் .இப்படி கலகலப்பாக தோனியும் , கலர்புல்லாக சியர் லீடரும்
ஆடுவதை பார்க்க, கேட்கவா வேணும்? வெல்லம்!
“கொஞ்சம் விஜய் டிவி போடுங்க !” பின்னாலிருந்து வந்த அந்த அசரீரியை
நான் காதில் விழாத மாதிரி உதாசீனம் செய்தேன்.
மனைவி !
“எப்பப்பாத்தாலும் என்ன கிரிக்கட்டோ ? ரிமோட் எங்கே?” என்ற அவள் கேள்வி,என் சந்தோஷம் முடிவுக்கு வந்ததை உறுதி செய்தது .
“சென்னை சூப்பர் கிங்க்ஸ்’மா ....ஸ்ருதிஹாசன்’லாம் வருவாங்க” என்று
சற்று கேவலமாக மார்க்கெட்டிங் கூட செய்து பார்த்தேன் . ம்ஹூம் ...வொர்க் அவுட்
ஆகவில்லை.
“எப்பிடித்தான் உக்காந்து இத
கண் கொட்டாம பாக்கரீங்களோ?? மேட்ச்தான்
இன்னும் ஆரம்பிக்கல இல்ல..அந்த ரிமோட்டை இப்பிடி கொடுங்க” என்று சீரியலுக்கு
மாற்றினாள்.
சரியாக மணி எட்டு ஆனதும், பாய்ந்து சென்று ரிமோட்டை பிடுங்கி ‘செட்மாக்ஸ்’ வைத்தேன். என் சுவர் கடிகாரம் ஸ்லோ ! முதல்
ஓவர் முடிந்து அதற்குள் ‘முரளி விஜய்’
பெவிலியன் திரும்பி இருந்தான். நான் பார்த்திருந்தால்,இது மாதிரி அசம்பாவிதங்கள்
நடக்க விட்டிருக்கமாட்டேன். மனைவியை கடிந்துகொண்டு , ரிமோட்டை லுங்கிக்குள்
பதுக்கியபடி “இன்னும் மூன்று மணி நேரத்துக்கு டிவி என்து” என்று அக்கிரமம்
செய்தேன். முறைத்தபடி எழுந்து போனாள் மனைவி..... அது! அங்கே மைதானத்தில் ஹஸ்ஸி ‘போடு போடு’ என்று
போட்டுக்கொண்டிருந்தான். ச்சியர் லீடர்கள் சளைக்காமல் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆறு
ஓவர் வரை, என் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது.
ஏழாவது ஓவரில் என் பாசக்கார மகள் அருகில் வந்தாள். சம்மர் ஹாலிடேஸ் ...
அறுபது நாள் விடுமுறை ! கூட விளையாட, அக்கம் பக்கம் குழந்தைகள் இல்லை ..அவளுக்கு
தெரிந்த ஒரே குழந்தை, சற்றே வயதான...பரிதாபமான .... நான் தான் !
“அப்பா ....ட்ரேட் வெளயாடலாமா?? கேரம் வெளயாடலாமா ?”
கத்தியா, துப்பாக்கியா? என்ன சோதனை இது ?
“கண்ணு.. நல்ல மேட்ச்’மா ! அப்பா நாளைக்கு வர்ரேன் வெளையாட...நீ போய்
ஸ்டோரி புக் படியேன் ” என்றேன்.
“போப்பா ...நேத்திக்கும் இதேதான் சொன்னே “ .
அவள் அதிகம் negotiate செய்வது
இல்லை. “மேட்ச் பாக்க கூடாது!” என்று
சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி தீர்ப்பு வழங்கி, பின்னர் ,ஜனாதிபதி மாதிரி, என்
கருணை மனுவையும் நிராகரித்தாள். ட்ரேட் கேம் போர்டை எடுத்துக்கொண்டு பெட்ரூமிற்க்கு என்னை திமிற
திமிற, ஒரு குற்றவாளியை போல, தள்ளிக்கொண்டு போனாள்.இது பாகிஸ்தான் மனைவியின் உள்நாட்டு
சதி வேலையாக இருக்கக்கூடுமோ என்ற ஐயத்துடன் எட்டிப்பார்த்தால் , ஒன்றுமே தெரியாத
மாதிரி, கிச்சனில் அவள் வாணலியில் எதையோ கிண்டிக்கொண்டிருந்தாள்.
“ஹலோ ...கொஞ்சம் ..கொழந்தயோட வெளயாடேன்..”
“எனக்கு வேலை இருக்கு..பகல் முழுக்க நான்தானே பாத்துக்கறேன் அவளை ?”
சே ! வேறு வழி இல்லை .... மனைவி வந்து சேனல்
மாற்றிவிட்டு, ரிமோட்டுக்கு தற்காலிக ஒவ்னராக தன்னை பிரகடனம் செய்துகொண்டாள். கிச்சனிலிருந்தபடி, ஆனந்தமாக சீரியல்
பார்க்க ஆரம்பித்தாள். சற்றே காதில் புகை விட்டபடி, நானும் நகர்ந்து போனேன்.
வேறு வழி இன்றி ,பெட்ரூமிற்கு போய் நானும் குழந்தையுடன் “ட்ரேட்” ஆட ஆரம்பித்தேன்.ஊர்களை வாங்குவோமாம்
.வீடு கட்டுவோமாம்.சரி சரி இந்த அபத்தத்தைத்தானே நாம் சிறுவனாக இருக்கும்போது
விளையாடினோம்?ஆனாலும் இந்த வயதில், எனக்கு சற்றே கஷ்டம்தான்! மனம்
முழுக்க மேட்சில்!
ஒரு மணி நேரம் போச்சு...மும்பை ,பெங்களூர்,சென்னை என்று ஊர்களை அவள்
வாங்கி மகிழ ,எனக்கு மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங் என்று ஐபிஎல் டீம்கள்
நினைவுக்கு வந்து போனது. நடுவில் போய்
ஸ்கோர் பார்த்து வருவோமா என்று நைசாக நகர
விழைந்தேன்.
“கொஞ்சம் இருமா...அப்பா போய் தண்ணி குடிச்சிட்டு வரேன்”
“ஓகே பா...ஆனா நேரா இங்க திரும்பி வா ..டிவி கிவி போடாதே !”
கிங்கரி! எனக்கு தண்ணி
வேண்டாம்.
தோனி வந்திருப்பானோ? அவள்
சாப்பிடும் நேரம் வந்தது . அப்பாடி!
சாதம்
ஊட்டிவிட அம்மா வந்தாச்சு. நைசாக நகர்ந்து ஹாலுக்கு போய் டிவியை போட்டேன்.மேட்ச் முதல்
இன்னிங்க்ஸ் முடிந்துவிட்டது .தோனி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறான்.நல்ல அடி...மிஸ்
செய்துவிட்டோமே ?என்று என்னை நானே நொந்தபடி,மீண்டும் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் பார்க்க
ஆரம்பித்தேன். .அதே ஜம்பிக் ஜபாங் ...அதே சித்து. பொறுமை தேவை .ஹா...இதோ
எந்தன் “கெய்ல் படவா”! மேட்ச் ஆரம்பித்து
விட்டது.சென்னை போவ்லர்கள் கெய்லை பார்த்து, முருகனையும் முத்துமாரி அம்மனையும்
வேண்டிக்கொள்கிறார்கள். ஆனந்தமாக மேட்ச் பார்க்க ஆரம்பித்தேன். முதல் ஆறு ஓவர்கள் பார்ப்பது கவிதையின் சுகம்.
சரியாக மேட்ச் ஆரம்பித்து, பத்து நிமிடத்தில் மகள் வந்து,பாதியில் விட்ட பிசினஸ் கேமை நினைவு கூர்ந்தாள்.
என்ன பெரிய டெக்ஸ்டைல் பிசினஸா? ...
“இன்னும் அரை மணி நேரம்’தான் வெளையாட்டு ....அப்புறம் ,சமத்தா
தூங்கணும் ..சரியா?”
“ஓகே பா....தூங்கறேன் ...நீ கதை சொல்வெல்ல? “என்று
கண்ணடித்தாள்.
நாசமா போச்சு ! இன்னிக்கு
மேட்ச் கோயிந்தா .
விளையாடி முடித்து பெட் போட்டு,கொசு வலை
போட்டு, ,பார்பி கதை சொல்லி ...உஷ்.....அப்பாடா...மகள் தூங்காமல் என்னை பார்த்து
இளித்து,இளித்து கடுப்பேத்திக்கொண்டிருந்தாள். மனைவியை
ஏன் இன்னும் இந்த பக்கம் காணோம்? என்ற ஐயத்துடனே, மெல்ல மகளை தட்டியபடி தூங்க வைக்க
முயன்றேன். அரை மணி நேரம் போச்சு. அப்பாடா ! ஒரு வழியாக மகள் தூங்கிவிட்டாள்.
மேட்ச்?
ஓடு ஓடு ....ஹாலுக்கு ஓடி
வந்தால்... அங்கே,
கடைசி ஓவர்... மிகுந்த டென்ஷனுடன், டிவி
பார்த்து , நகம் கடித்தபடி,
“சென்னை ஜெயிச்சுருவாங்க போல இருக்கு?” என்று
சிரித்தாள் மனைவி.
சில நாள் கழித்து டிவியில் நான் பார்த்த
செய்தி ‘கிலிகிலி’யே அளித்தது. IPL Spot Fixing ஊழல் விவகாரம்!! பார்த்த அத்தனை பேரையும் பைத்தியக்காரன் ஆக்கிவிட்டு,நேரத்தை வீணாக்கி ...என்ன
எழவுக்குடா இத்தனை நாள் இந்த “ஜம்பிக் ஜப்பாங்கு”??.ஞானோதயம் பிறந்தது .இனி ஐபிஎல் பார்க்கக்கூடாது
என்று முடிவு செய்துவிட்டேன்.
அடுத்த நாள் ஆபீஸ் போனால் ,நண்பர் ஹரி ....
.” ஆமாங் ...சேம்பியன்ஸ் ட்ராபி எப்போ வருது சார்??” என்கிறார்.
பார்க்கலாமா .வேணாமா?
பார்ப்பேன் .
கிரிக்கெட் சார் !
No comments:
Post a Comment